கோவை- குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தம்பதியினர் உயிரிழப்பு

 

கோவை- குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தம்பதியினர் உயிரிழப்பு

கோவை

பொள்ளாச்சி அருகே குடும்பத்தகராறில் கிணற்றில் குதித்த மனைவி மற்றும் அவரை மீட்க சென்ற கணவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடிவலசு பகுதியை சேர்ந்தவர் பிரபுகுமார். மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த இவருக்கு நந்தினி என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்துவருகிறார். பிரபுகுமார் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கோவை- குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தம்பதியினர் உயிரிழப்பு

இந்நிலையில் நேற்று மீண்டும் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், நந்தினி அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். மனைவியை காப்பாற்றும் நோக்கில் பிரபுவும் கிணற்றில் குதித்த நிலையில், இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தோட்ட உரிமையாளர் முருகானந்தம் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் உதவியுடன் இருவரின் உடல்களை தேடும் பணியில் வடக்கிபாளையம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.