கோவை- கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது – சிறையில் அடைப்பு!

 

கோவை- கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது – சிறையில் அடைப்பு!

கோவை

கோவை போத்தனூர், ஈச்சனாரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை- கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது – சிறையில் அடைப்பு!

அந்த பகுதியில் , கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 2 1/4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனையின் போது, அந்த பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்துள்ளார். அவரை விசாரித்த போலீசார் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை- கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது – சிறையில் அடைப்பு!

இதனையடுத்து, அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், ஒத்தக்கால் மண்டபம் பகுதியை சேர்ந்த அனிஷ் பாபு (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல், ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த, 2 இளைஞர்களிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பிடிபட்டது.

கோவை- கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது – சிறையில் அடைப்பு!

இதனையடுத்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இருவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (21) மற்றும் சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (எ) சீனு என்பது தெரியவந்தது. அதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.