காபி பிரியர்களே !காபிய எந்த நேரத்துல எப்படி குடிச்சா ,எந்தெந்த நோய் வராதுன்னு தெரிஞ்சிக்கோங்க..

 

காபி பிரியர்களே !காபிய எந்த நேரத்துல எப்படி குடிச்சா ,எந்தெந்த நோய் வராதுன்னு  தெரிஞ்சிக்கோங்க..

சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்களுக்கு இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் முடிந்தால் காபியினை தவிர்த்து விடுங்கள் என்றே அறிவுறுத்தப்படுகின்றது.

நீங்கள் அதிக கொழுப்பை பெற்று இருந்தாலோ அல்லது குழந்தையாக இருந்தாலோ அல்லது கர்ப்பிணியாக இருந்தாலோ காபி குடிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. காபியால் நமக்கு ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும் அளவு சரியாக இருக்க வேண்டும். அதிகப்படியான காபி என்றைக்குமே தீங்கு விளைவிக்கும். அதே மாதிரி தரமான காபியை தேர்ந்தெடுத்து பருகுதல் அவசியம்.

காபி, டீ, கோகோ இவைகளில் காபின் என்ற பொருள் உள்ளது. இது சக்தியினை தூண்டி விடும் பொருள். காபியினை நிதான அளவில் குடிப்பவர்களுக்கு நடுக்குவாதம் எனப்படும் பார்க்கின்சன்ஸ் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

அதே போல் அளவான காபி அருந்துபவர்களுக்கு மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகள் காபின் மூளை வீக்கத்தினைக் கூட தவிர்க்கின்றது என்று கூறியுள்ளன. வீக்கமே பல நோய்களுக்கு காரணம் எனப்படும் நிலையில் காபீனில் உள்ள அமினோ அமிலங்கள் வீக்கங்களை குறைக்க உதவுவதாகவே சமீபத்திய ஆய்வு கூட கூறுகின்றது.

காபி பிரியர்களே !காபிய எந்த நேரத்துல எப்படி குடிச்சா ,எந்தெந்த நோய் வராதுன்னு  தெரிஞ்சிக்கோங்க..

குறைந்த  அளவில் காபி குடிப்பவர்களுக்கு மனஉளைச்சல் குறைகின்றது. சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு குறைகின்றது. ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குக் கூடுகின்றது.

குறைந்த  அளவு காபி இருதய பாதிப்பினால் ஏற்படும் இருதய அபாயத்தினைக் குறைக்கின்றது. சில குறிப்பிட்ட வகை புற்று நோய்களையும் 27 சதவீதம் வரை குறைக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

அப்படியென்றால் காபி நல்லதா? என்றால் நல்லது என்பதற்கு ஒரு அளவு கோல் இருக்கின்றது. இந்த, ஆய்வுகள் வெளி நாடுகளில் நடப்பவை. ‘சிக்கரி’ கலப்பு இல்லாதவை. காபி டிகாஷனும் அடர்த்தியாக இராது மெல்லியதாக இருக்கும். அவர்கள் குடிக்கும் காபியில் பால் கூட இராது. நம்ம ஊர் பழக்கம் அப்படி அல்ல.

அடர்த்தியான டிகாஷன், தண்ணி கலக்காத அடர்த்தியான பால். காபி பொடி சிக்கரி கலந்தது. பல இடங்களில் காபி பொடியில் கலப்படங்கள் வேறு உள்ளன.

டிகிரி காபி என்ற பெயரில் காபியினை கூழ் போல் ஒரு பெரிய டம்ளரில் குடிக்கின்றோம். அதுவும் ஒருமுறை அல்ல. அடிக்கடி குடிக்கின்றோம். இரவில் கூட காபி அருந்துபவர்கள் அநேகர் உண்டு. காலையிலும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக திராவகம் போல் இதனை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை இவ்வாறு செய்வதால் பின்பு தீமைகள் விளைகின்றன.

காபி குடித்துத்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் மனிதனுக்குக் கிடையாது. அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் தரமான பொடியினை பயன்படுத்துங்கள். பகல் 12 மணிக்கு மேல் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகோ அல்லது 11 மணி அளவில் 2 மாரி பிஸ்கட்டுடனோ அருந்துங்கள். டிகிரி காபி உங்கள் வயிற்றை புண்ணாக்கி விடும் என்பதனை உணருங்கள்.

கருவில் கடாபியின் தாக்கம் என்பது அதிகம். எனவே கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்காத அளவு கசாபின் குடிப்பது அவசியம். நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது காபி குடித்தால், காபி கருவை அடைந்து குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நீங்கள் காபி பிரியராக இருந்தால் கூட கர்ப்ப காலத்தில் காபி குடிப்பதை தவிருங்கள். முடியாவிட்டால் ஒரு நாளைக்கு ஒரு கப் மேலே காபி குடிக்காதீர்கள்.

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் நபர்கள் பில்டர் காபியை குடித்து வாருங்கள். இருப்பினும் காஃபெஸ்டால் மற்றும் கஹ்வீல் பண்புகளைக் கொண்ட காபியில் புற்றுநோயைக் எதிர்க்கும் பண்புகள் உள்ளன. மேலும் இந்த வகை காபிகள் கல்லீரலுக்கு நல்லது. எனவே குறைந்த கொழுப்பு உடையவர்கள் அல்லது கொழுப்பு இல்லாதவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.