ஈரோட்டில் அம்மன் சிரசில் அமர்ந்த நல்ல பாம்பால் பரபரப்பு!

 

ஈரோட்டில் அம்மன் சிரசில் அமர்ந்த நல்ல பாம்பால் பரபரப்பு!

ஈரோடு

ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் அம்மன் சிரசில் நல்லப் பாம்பு அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மாணிக்கம்பாளையத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில், நேற்று மதியம் இந்த கோவிலுக்குள் திடீரென 5 அடி நீளமுடைய நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. தொடர்ந்து, அந்தப் பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி, சிரசில் அமர்ந்து கொண்டது.

ஈரோட்டில் அம்மன் சிரசில் அமர்ந்த நல்ல பாம்பால் பரபரப்பு!

கோவிலுக்கு வந்த பொதுமக்கள் இந்த காட்சியை கண்டு மெய் சிலிர்த்து, பய பக்தியுடன் பாம்பை வழிபட்டனர். மேலும், கோவில் பூசாரி நல்லப் பாம்பிற்கு பூஜை செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இந்த செய்தி அந்த பகுதியில் பரவியதால் படமெடுத்து ஆடும் நாகத்தை காண கோவில் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக இதுகுறித்து, பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த யுவராஜ், அம்மன் சிரசில் அமர்ந்திருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து, சாக்கு பையில் போட்டார். பின்னர், அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் சென்று பத்திரமாக விடப்பட்டது.