இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

 

இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

ஆகஸ்ட் 1 வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலைகளில் புதிய மாவட்டங்கள், கோயம்புத்தூர்,தேனி ,திண்டுக்கல் ,தென்காசி, சேலம், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

வருகின்ற 31ஆம் தேதி மற்றும் 1ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் , அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸில் ஒட்டியிருக்கும்.

இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

இன்று முதல் வருகின்ற 1 ஆம் தேதி வரை வட மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் ,தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.