இஸ்லாமிய பெருமக்களுக்கு பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் – முதல்வர் ஸ்டாலின்

 

இஸ்லாமிய பெருமக்களுக்கு பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் – முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாள் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை இதயபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய கோட்பாடுகள் இரண்டும் இஸ்லாமிய மக்களின் கண்ணின் மணிகளாக என்றும் இருந்து வருகின்றன. நபிகள் நாயகம் அளித்த போதனைகள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைபிடிக்க வேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணர்ந்துள்ள அவர்கள் அதன் வழி நின்று அடிபிறழாமல் பின்பற்றி இந்த பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

இஸ்லாமிய பெருமக்களுக்கு பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் – முதல்வர் ஸ்டாலின்

ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகளுக்கு, பிறகு நண்பர்களுக்கு, அடுத்த தான் நமக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து பயன்படுத்திக்கொள்ளும் அன்பையும் மனிதநேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்தும் விதமாக பக்ரீத் பண்டிகை நாளன்று ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை வாரி வழங்குகிறார்கள். நபிகள் நாயகத்தின் போதனைகள் சிறப்பும் பெருமையும் சேர்க்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த தியாக பெருநாளை மகிழ்ச்சியுடனும் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டும் கொண்டாட வேண்டும் என வேண்டி பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.