“சசிகலா வருகை எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது” – முதலமைச்சர்
Nov 18, 2020, 20:04 IST1605710097000
கோவை
சசிகலா வெளியே வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், வடகிழக்கு பருவமழை பாதிப்பை சரிசெய்யவும், பருவமழையால் மக்கள் பாதிக்காமல் இருக்கவும், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், ஆன்லைன் லாட்டரி தடை குறித்து சட்டம் இயற்றி உள்ளதாகவும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிவதாகவும் அவர் தெரிவித்தார்.