‘கடவுளுக்கு தான் தெரியும்…கொரோனா எப்போது ஒழியும் என்று’: முதல்வர் பழனிசாமி

 

‘கடவுளுக்கு தான் தெரியும்…கொரோனா எப்போது ஒழியும் என்று’: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இடம் சென்னை தான். தமிழகத்தின் தலைநகரான சென்னையை கொரோனா வைரஸ் புரட்டிப் போட்டுள்ளது. பிழைப்பு தேடி சென்னை வந்தவர்கள் எல்லாம், உயிர் பிழைக்கச் சொந்த ஊர்களை நோக்கிப் படையெடுத்து விட்டனர். இவ்வாறு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சென்னையில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னைவாசிகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். அதே போல காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது.

‘கடவுளுக்கு தான் தெரியும்…கொரோனா எப்போது ஒழியும் என்று’: முதல்வர் பழனிசாமி

இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் கொரோனா எப்போது ஒழியும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கொரோனா எப்போது ஒழியும் என்று கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் என்று பதில் அளித்திருக்கிறார்.