இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடம் உரையாற்றுகிறார் முதல்வர்!

 

இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடம் உரையாற்றுகிறார் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனை தடுக்க அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். நேற்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது. சென்னை நேற்று மட்டும் 1,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடம் உரையாற்றுகிறார் முதல்வர்!

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். அப்போது, கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிக்கப் படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல மத்திய அரசு அறிவுறுத்தலின் படி 8 ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு தளர்த்தப்படுவதால், அதனை பற்றிய தகவல்களையும் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.