இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

 

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களிலும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நாளொன்றுக்கு 500 முதல் 700 வரை உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக 1000ஐ எட்டியுள்ளது. இவ்வாறு கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க உள்ளார். அப்போது தமிழகத்தில் மேற்கொள்ள பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஆளுநருக்கு விளக்கம் அளிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் 3 ஆவது முறையாக ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.