கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க ஸ்டாலின்

 

கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க ஸ்டாலின்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 5,849பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 89,561பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தினமும் கொரோனா உறுதியாகும் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதே போல சென்னையில் எவ்வளவு உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க ஸ்டாலின்

ஆனால் தமிழக அரசு கொரோனா விவரங்களையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் மறைப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வந்தார். இந்த நிலையில் காணொளி வாயிலாக பேசிய மு.க ஸ்டாலின், கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கொரோனா மரணத்தை போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று கூறியுள்ளார்.