ஓபிஎஸ் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் பழனிசாமி!

 

ஓபிஎஸ் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளன. அவற்றை அரசியல் கட்சிகள் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. முதல்வர் வேட்பாளர்கள் உட்பட அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் பலர், தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே தங்கி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் பழனிசாமி!

அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பழனிசாமி வாக்குப் பதிவுக்குப் பிறகு சேலத்திலேயே தங்கி இருந்தார். கட்சி நிர்வாகிகளுடன் அவ்வப்போது சந்தித்து பேசி முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார். தேர்தல் முடிவு அறிவிப்புகள் வெளியான பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் ஆலோசித்தார்.

ஓபிஎஸ் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் பழனிசாமி!

இந்த நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் மாமியார் வள்ளியம்மாள் படத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று தேனி சென்றார். ஓபிஎஸ் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது மாமியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது ஓபிஎஸ் வீட்டுக்கு சென்றிருந்த முதல்வர் பழனிசாமி அவரது தாயாரிடம் ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.