‘சொத்துரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது ‘.. முதல்வர் பழனிசாமி பதிவு

 

‘சொத்துரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது ‘.. முதல்வர் பழனிசாமி பதிவு

கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2005 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், “சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘சொத்துரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது ‘.. முதல்வர் பழனிசாமி பதிவு

இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், இந்த தீர்ப்பு வரலாற்றிலேயே சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும் அனைத்து தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அடித்தளம் அமைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.” என குறிப்பிட்டுள்ளார்.