“அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுகிறேன்” – முதல்வர் பதிவு!

 

“அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுகிறேன்” – முதல்வர் பதிவு!

காவலர் வீரவணக்க தினத்தையொட்டி, முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீர தீர செயல்களை புரிந்து, பணியில் உயிர் நீத்த காவலர்களை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்.21ம் தேதி நாடு முழுவதும் காவலர் வீரவணக்கம் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு காவலர்கள் நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உயிர் நீத்த காவலர்களுக்கு காவல்துறையினர் மரியாதை செய்தனர். அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் டிஜிபி திரிபாதியும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

“அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுகிறேன்” – முதல்வர் பதிவு!

இந்த நிலையில், காவலர் வீரவணக்க தினத்தில் அவர்களின் தியாகத்தை நினைவு கூறுவதாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்” சமூகத்தின் பாதுகாவலனாய், பொதுமக்களின் உற்ற தோழனாய், அர்ப்பணிப்பின் இலக்கணமாய், தங்களின் அயராத உழைப்பால் அல்லும் பகலும் மக்கள் பணியாற்றிடும் அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை தேசிய காவல்துறை தின நாளில் நினைவு கூர்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.