‘தொடர்ந்து 4ஆவது முறையாக பீகார் முதல்வராகும் நிதிஷ்குமார்’ – முதல்வர் வாழ்த்து!

 

‘தொடர்ந்து 4ஆவது முறையாக பீகார் முதல்வராகும் நிதிஷ்குமார்’ – முதல்வர் வாழ்த்து!

பீகார் முதல்வராக பதவியேற்க உள்ள நிதிஷ்குமாருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

‘தொடர்ந்து 4ஆவது முறையாக பீகார் முதல்வராகும் நிதிஷ்குமார்’ – முதல்வர் வாழ்த்து!

கொரோனா அச்சுறுத்தல்களுக்கிடையே பீகார் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவில், பாஜக- நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி பெற்றது. பீகார் தேர்தலில் பாஜக மாநில கட்சிகளுடன் ஒப்படுகையில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், நிதிஷ்குமாரை முதல்வராக அரியணை ஏற்ற பாஜக தேர்ந்தெடுத்தது. அதன் படி, தொடர்ந்து 4ஆவது முறையாக நிதிஷ்குமார் பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளார். பீகாரின் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால், பாஜகவை சேர்ந்த 2 பேர் துணை முதல்வராக பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தொடர்ந்து 4ஆவது முறையாக பீகார் முதல்வராகும் நிதிஷ்குமார்’ – முதல்வர் வாழ்த்து!

இந்த நிலையில் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அன்புள்ள நிதீஷ்குமார் ஜி, பீகார் முதலமைச்சராக தாங்கள் நான்காவது முறையாக நீங்கள் பொறுப்பேற்றதற்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான பதவிக்காலத்தை அடைய விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.