‘விஜயகாந்த் உடல்நிலை பற்றி நலம் விசாரித்தேன்’ முதல்வர் பழனிசாமி ட்வீட்!

 

‘விஜயகாந்த் உடல்நிலை பற்றி நலம் விசாரித்தேன்’ முதல்வர் பழனிசாமி ட்வீட்!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்ததாக முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இன்று காலை கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியானது. வழக்கமான உடல் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா உறுதியானதால் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்ட நிலையில், இந்த செய்தியை தேமுதிக உறுதிப்படுத்தியது. அவருக்கு கொரோனா அறிகுறி சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் உடல்நிலை நலமாக இருப்பதாகவும் தெரிவித்தது.

‘விஜயகாந்த் உடல்நிலை பற்றி நலம் விசாரித்தேன்’ முதல்வர் பழனிசாமி ட்வீட்!

அதனைத்தொடர்ந்து, மியாட் மருத்துவமனையும் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இதனிடையே, கொரோனா சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் பற்றி நலம் விசாரித்ததாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “திரு.விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். விஜயகாந்த் அவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.