‘தமிழ்நாட்டின் மீது பேரன்பு கொண்டவர்’ – மோடியை புகழ்ந்து தள்ளிய முதல்வர்!

 

‘தமிழ்நாட்டின் மீது பேரன்பு கொண்டவர்’ – மோடியை புகழ்ந்து தள்ளிய முதல்வர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்துக்கு வருகை தந்துள்ளார். அங்கு நடைபெற்று வரும் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணை தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

‘தமிழ்நாட்டின் மீது பேரன்பு கொண்டவர்’ – மோடியை புகழ்ந்து தள்ளிய முதல்வர்!

அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி , நீர்பற்றாக் குறையை தீர்க்க அம்மா அரசு திட்டம் கொண்டு வந்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு குடிநீர் பிரச்னை இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இணக்கமான நிலை இருந்தால் தான் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேறும். பேரன்பு கொண்ட பிரதமர் குடிநீர் திட்டத்தை நமக்கு நிறைவேற்றித் தருவார். ஸ்மார்ட் சிட்டி மூலம் பெருநகரங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை நோக்கி முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தந்த அரசாங்கம் அம்மா அரசு தான். ஏழை, எளிய, நசுக்கப்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் கல்வி கற்க அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் கொடுமையான காலகட்டம். அதிகளவில் பரிசோதனை செய்யப்பட்ட இடம் தமிழகம் தான். அதனால் தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது என்று தெரிவித்தார்.

‘தமிழ்நாட்டின் மீது பேரன்பு கொண்டவர்’ – மோடியை புகழ்ந்து தள்ளிய முதல்வர்!

மேலும், அதிமுக ஆட்சி மீண்டும் தொடர அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இரட்டை இலை, தாமரை, மாம்பழம் ஆகிய சின்னங்களில் வாக்களிக்க வேண்டுமென்று மக்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார். இதனிடையே, தமிழக மக்கள் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி என்றும் பிரதமரின் உழைப்பால் உலக அளவில் இந்தியா பெருமை அடைந்துள்ளது என்றும் புகழாரம் சூட்டினார்.