“உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும்”

 

“உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும்”

மக்களிடம் உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும் எந்திரபிஉ முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

“உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும்”

கோவையில் 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் பழனிசாமி, புளியங்குளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் முதலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மக்கள் மத்தியில் பேசிய அவர், கடவுளை இழிவுப்படுத்தியவர் கையிலேயே கடவுள் வேல் கொடுத்துள்ளார். மு.க. ஸ்டாலின் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர். அதிமுகவிற்கு இறைவன்தான் வரம் கொடுப்பார். கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது, தண்டனைதான் கிடைக்கும். மு.க. ஸ்டாலினுக்கு தேர்தல் மூலம் கடவுள் கண்டிப்பாக தண்டனை கொடுப்பார். மக்களிடம் உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும். அதிமுக தெய்வகுணம் கொண்ட கட்சி.தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அடுத்தவர்களுக்கு நன்மை செய்பவர்களாக இருப்பார்கள் ” என்றார்.

“உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும்”

தொடர்ந்து பேசிய அவர் ஸ்டாலின், ‘ஸ்டாலின் வேறு புதிய அவதாரம் எடுத்து விட்டார். இயற்கையாக இறை பக்தி இருந்தால் தான் இறைவன் அருள் புரிவான் ; தேர்தல் வந்துவிட்டால் எப்படி எல்லாம் நாடகம் போட முடியுமோ அப்படி எல்லாம் நாடகம் போடுபவர் ஸ்டாலின் ‘ என்றார்.