இது தான் அவங்களுக்கு கடைசி தேர்தலா இருக்கணும்.. ஈபிஎஸ் அதிரடி!

 

இது தான் அவங்களுக்கு கடைசி தேர்தலா இருக்கணும்.. ஈபிஎஸ் அதிரடி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மே 2ம் தேதி அடுத்த முதல்வர் யார் என்பது தெரிய வந்துவிடும். தமிழகத்தின் மாபெரும் கட்சியான திமுக, அதிமுகவுக்கு இது முக்கியமான தேர்தல். இரு கட்சிகளுமே ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கின்றன. அதற்காக பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றன.

இது தான் அவங்களுக்கு கடைசி தேர்தலா இருக்கணும்.. ஈபிஎஸ் அதிரடி!

குறிப்பாக, அதிமுக தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறது. முதல்வர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. அதை இந்த தேர்தலில் உடைத்தெறிய வேண்டுமென அதிமுக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. பிரச்சாரத்தின் போது, திமுகவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறது.

இது தான் அவங்களுக்கு கடைசி தேர்தலா இருக்கணும்.. ஈபிஎஸ் அதிரடி!

இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுகவுக்கு இந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் இறுதியாக இருக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சொந்தமாக்கிக் கொள்வார்கள் என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் ஏனென்றால் மக்கள் சக்தி அதிமுகவில் உள்ளது என்றும் அவர் கூறினார்.