விவேக் குணமடைய பிரார்த்திக்கிறேன் – முதல்வர் ஈபிஎஸ்

 

விவேக் குணமடைய பிரார்த்திக்கிறேன் – முதல்வர் ஈபிஎஸ்

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத் துடிப்பை சீராக்க எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஆஞ்சியோ ஆபரேஷன் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவரது பிஆர்ஓ நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

விவேக் குணமடைய பிரார்த்திக்கிறேன் – முதல்வர் ஈபிஎஸ்

விவேக்கின் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவமனை நிர்வாகம், அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று மாலைக்குள் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு விவேக்கிற்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென ரசிகர்களும் திரையுலகினரும் அரசியல் தலைவரும் பிரார்த்திக்கின்றனர்.

விவேக் குணமடைய பிரார்த்திக்கிறேன் – முதல்வர் ஈபிஎஸ்

இந்த நிலையில், விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக துணை முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகை குஷ்பு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் விவேக் மீண்டு வரவேண்டுமென பதிவிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.