‘தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

 

‘தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிவர் புயல் கரையைக் கடந்ததை தொடர்ந்து, வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை காலை புயலாக வலுப்பெறும் என்றும் இதற்கு புரெவி என பெயரிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

‘தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

மேலும், இந்த புயலால் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புரெவி குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, டிசம்பர் 4 வரை பெருமழை புயல் வாய்ப்பு இருப்பதால் தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அண்டை மாநிலப் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் உடனே அந்தந்த மாநிலங்களில் கரையேறுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

‘தென் மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

மேலும், மக்கள் முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மின்கம்பிகள், , மின் மாற்றிகள் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் என்றும் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக புயல் பற்றிய அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.