எடப்பாடியை கடுப்பாக்கிய ‘அந்த கேள்வி’.. அதிர்ந்து போன அதிமுக தொண்டர்கள்!

 

எடப்பாடியை கடுப்பாக்கிய ‘அந்த கேள்வி’.. அதிர்ந்து போன அதிமுக தொண்டர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் வாக்குகளை சேகரிக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. முதல்வர் வேட்பாளர்கள் அனைவரும் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பொற்சரம் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் முதல்வர் பழனிசாமியும் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கிறார்.

எடப்பாடியை கடுப்பாக்கிய ‘அந்த கேள்வி’.. அதிர்ந்து போன அதிமுக தொண்டர்கள்!

அவர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் கூட்டணி கட்சிகளான பாமக மாற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். அந்த வகையில் இன்று தருமபுரியில் முதல்வர் பழனிசாமி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு நபர், தருமபுரிக்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

எடப்பாடியை கடுப்பாக்கிய ‘அந்த கேள்வி’.. அதிர்ந்து போன அதிமுக தொண்டர்கள்!

அதைக் கேட்ட எடப்பாடி, உங்களது குற்றச்சாட்டுகளுக்கு நான் அப்புறம் பதில் சொல்கிறேன் என கூறியிருக்கிறார். அதை ஏற்காத அந்த நபர், மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்துள்ளார். இதனால் கடுப்பான முதல்வர், நான் தான் பேசிட்டு இருக்கேன்ல. இடையில் பேசாதே. உங்களின் குற்றச்சாட்டை பற்றி பிறகு பேசுகிறேன் என கோபமாக சொல்லியிருக்கிறார்.

முதல்வர் கோபப்பட்டதை கண்டு அதிர்ந்து போன அதிமுக தொண்டர்கள், கேள்வி கேட்ட அந்த நபருக்கு எதிராக சத்தமிட தொடங்கியுள்ளனர். உடனே 4 பேர் அந்த நபரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.