‘ஜாதி, மதத்தை பார்த்து ஆட்சி செய்யும் அரசு அதிமுக அல்ல’ – முதல்வர் பேச்சு!

 

‘ஜாதி, மதத்தை பார்த்து ஆட்சி செய்யும் அரசு அதிமுக அல்ல’ – முதல்வர் பேச்சு!

ஜாதி, மதம் பார்க்கும் கட்சி அதிமுக இல்லையென முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, குறுகிய எண்ணம் கொண்ட கட்சி திமுக தான். அதிமுக பரந்த எண்ணம் கொண்ட கட்சி. சிலர் மதத்தின் அடிப்படையிலும் ஜாதியின் அடிப்படையிலும் வாக்குகள் பெறுவதற்காக முயற்சிக்கின்றனர். அதிமுக பொறுத்தவரை மதத்தை பார்த்து ஆட்சி செய்யும் அரசு அல்ல. எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சரி, ஜெயலலிதாவின் ஆட்சியிலும் சரி. ஆண் ஜாதி பெண் ஜாதி மட்டும் தான். ஜாதி பார்க்கும் கட்சியும் அதிமுக கிடையாது என்று அதிரடியாக பேசினார்.

‘ஜாதி, மதத்தை பார்த்து ஆட்சி செய்யும் அரசு அதிமுக அல்ல’ – முதல்வர் பேச்சு!

தொடர்ந்து, தமிழகத்தில் அமைதிப் பூங்கா தான் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு பேணிக் காப்பதில் நம்பர் 1 மாநிலம் தமிழகம் தான். மண்ணில் பிறந்த எல்லா மதத்தினருக்கும் அம்மா அரசு முழு பாதுகாப்பு கொடுக்கும். அதில், எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்று கூறினார்.

மேலும், ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறோம். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என எதிர்க்கட்சிகள் தவறான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கின்றன. 100 சதவீதம் அது பொய். அதிமுகவின் முந்தைய தலைவர்கள் எவ்வழியில் சென்றார்களோ அதே வழியில் தான் கட்சி தொடர்ந்து பயணிக்கும் என்றும் தெரிவித்தார்.