செப்.29 ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

 

செப்.29 ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 29ம் தேதி மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசித்தார். பின்னர் பொதுப்போக்குவரத்து சேவையை தொடங்குமாறு நிபுணர் குழு பரிந்துரைத்ததன் பேரில், பேருந்து மற்றும் ரயில் சேவைக்கு முதல்வர் அனுமதி அளித்தார். அதே போல மால்கள், பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தையும் திறக்கலாம் என அறிவித்தார். அதன் படி, முதல்வர் அறிவித்த தளர்வுகளால் தமிழகம் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

செப்.29 ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்த நிலையில், வரும் செப்.29ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்.30 ஆம் தேதியோடு தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நிறைவடைய உள்ளதால், ஊரடங்கை நீடிப்பது குறித்தும் மேலும் சில தளர்வுகளை அளிப்பது குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்துவதற்கு முன்னர் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.