“அதைக் கேட்டாலே ஸ்டாலின் அலறுறாரு”… முதல்வர் பழனிசாமி கலாய்!

 

“அதைக் கேட்டாலே ஸ்டாலின் அலறுறாரு”… முதல்வர் பழனிசாமி கலாய்!

சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமாரை ஆதரித்தும் திரு.வி.க. நகர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் கல்யாணியை ஆதரித்தும் முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சிறு குறு தொழில்கள் தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கித் தந்த அரசு அம்மா அரசு. வேலைவாய்ப்பு கொடுப்பது அரசின் கடமை. அதை என்னுடைய அரசு சிறப்பாக செய்திருக்கிறது. புதிய புதிய தொழிற்சாலைகள் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றோம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

“அதைக் கேட்டாலே ஸ்டாலின் அலறுறாரு”… முதல்வர் பழனிசாமி கலாய்!

தொடர்ந்து பேசிய அவர், 2006 – 2011 வரை தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடைபெற்றது. கடுமையான மின்வெட்டு இருந்தது. அம்மா ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன் படி செய்தும் வருகிறோம். தமிழகம் மின் விநியோக மாநிலமாக இருக்கிறது. தேவைக்கு அதிகமாக மின்சாரம் கிடைக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக வாழும் ஆட்சி அதிமுக ஆட்சி தான் என்று கூறினார்.

“அதைக் கேட்டாலே ஸ்டாலின் அலறுறாரு”… முதல்வர் பழனிசாமி கலாய்!

மேலும், வெற்றி நடை போடும் தமிழகம் என்பதை அதிமுக அரசு செயல்படுத்தி இருக்கிறது. இதை சொன்னாலே ஸ்டாலின் அலறுகிறார். திமுக பயப்படுகிறது. திமுக ஆட்சியில் அவர்கள் தங்களது குடும்பத்தை தான் பார்த்தார்கள். நாட்டு மக்களை பார்க்கவில்லை. அப்படி பார்த்திருந்தால் மக்களின் கஷ்டம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். எதுவுமே தெரியாத ஒரே தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தான். எதற்கும் நான் அஞ்ச மாட்டேன். ஸ்டாலினின் நினைத்தது நடக்கவில்லை என்று ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.