“வெற்றி நடை போடும் தமிழகம்”… செல்லும் இடமெல்லாம் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!

 

“வெற்றி நடை போடும் தமிழகம்”… செல்லும் இடமெல்லாம் முதல்வருக்கு  உற்சாக வரவேற்பு!

வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூன்று நாள் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். நேற்று நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் பிரச்சாரம் செய்தார். அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், சரோஜா உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.

“வெற்றி நடை போடும் தமிழகம்”… செல்லும் இடமெல்லாம் முதல்வருக்கு  உற்சாக வரவேற்பு!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் காலை வழிபாடு மேற்கொண்ட முதல்வர் தொடர்ந்து லாரி மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உடன் சந்திப்பு நிகழ்த்தினார். தொடர்ந்து ராசிபுரத்தில் உள்ள அருந்ததியினர் காலனியில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் அங்கு பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய முதல்வர், நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம்.

“வெற்றி நடை போடும் தமிழகம்”… செல்லும் இடமெல்லாம் முதல்வருக்கு  உற்சாக வரவேற்பு!

எம்ஜிஆர் காலத்திலும் சரி ; அம்மா காலத்திலும் சரி; தற்போது என் காலத்திலும் சரி. என் ஆட்சி காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அளித்துள்ளேன். அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் அதை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சூழ்ச்சி செய்து வருகிறார் என்றார்.

“வெற்றி நடை போடும் தமிழகம்”… செல்லும் இடமெல்லாம் முதல்வருக்கு  உற்சாக வரவேற்பு!

இதையடுத்து வேனில் ஏறி பிரச்சாரத்தை துவங்கிய முதல்வர் அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்து வந்தார். முதல்வர் பதவிக்கு ஆசைப்படுபவன் நான் இல்லை. மக்களை தான் நான் முதல்வராக பார்க்கிறேன் என கூறிய முதல்வர், அடுத்த ஆண்டு தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட உள்ளது எனவும் இதனால் 443 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படித்து கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.

“வெற்றி நடை போடும் தமிழகம்”… செல்லும் இடமெல்லாம் முதல்வருக்கு  உற்சாக வரவேற்பு!

அத்துடன் பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் விவேக் வீட்டில் தேனீர் அருந்தினார் முதல்வர் பழனிசாமி. பரப்புரை மேற்கொள்ள முதல்வர் சென்ற இடமெல்லாம் மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.