கோதையாறு அணையில் இருந்து வரும் 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

 

கோதையாறு அணையில் இருந்து வரும் 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு அணையில் இருந்து, நெல்லையில் உள்ள ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக வருகிற 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கோதையாறு அணையில் இருந்து வரும் 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கோதையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ராதாபுரம் விவசாயிகள் கோரிக்கை வைத்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கோதையாறு அணையில் இருந்து வருகிற 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை விநாடிக்கு 75 கன அடி வீதம், தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் கிடைப்பதுடன் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.