நம்பியார் நீர்த்தேக்கத்திலிருந்து 27முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

 

நம்பியார் நீர்த்தேக்கத்திலிருந்து 27முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

பாசன வசதிக்காக நம்பியார் நீர்த்தேக்கத்திலிருந்து 27முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நம்பியார் நீர்த்தேக்கத்திலிருந்து 27முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் நம்பியார் நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று திருநெல்வேலி மாவட்டம் நம்பியார் நீர்த்தேக்கத்திலிருந்து, நம்பியார் நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடது மதகுகளில் பிரதான கால்வாய்களின் கீழ், பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 27.1 .2021 முதல் 31.3.2021 வரை நாள்தோறும் வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

நம்பியார் நீர்த்தேக்கத்திலிருந்து 27முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு!

இதனால் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் ராதாபுரம் வட்டங்களில் 1744.55 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.