28 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

 

28 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற அரசு நாளை முதல் ஜூலை 28 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

28 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெரும் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு பெருங்குடி வேளான் மக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த வாய்க்கால் மூலம் 28 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் உள்ளிட்ட 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, மகசூலை அதிகமாக பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.