சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 

சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

நம்ம சென்னையின் 382-ஆவது பிறந்ததினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

“வந்தாரை வாழ வைக்கும் சென்னை”ன்னு சும்மாவா சொன்னாங்க. இங்க பணக்காரரா இருக்கும் பாதி பேரு சென்னைக்கு பிழைக்க வந்து உழைப்பால் முன்னேறுனவங்க தான். கிராமத்துல இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை “நீ சென்னைக்கு போய் பிழைச்சுக்கடா” என்று சொல்லி நம்பி அனுப்பும் ஊரு இது. சாதி, மத பேதிமின்றி வந்த எல்லாரும் பிழைக்கும் இடம் இது. காசு இருந்தா ஸ்டார் ஹோட்டல், காசு இல்லன்னா கையேந்தி பவன்னு எல்லா தரப்பு மக்களையும் வாழவைக்கும் இடம் இது.

சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இத்தகைய பெருமைமிக்க சிங்கார சென்னையின் 382-ஆவது பிறந்ததினம் இன்று. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சீர்மிகு, சிங்கார – வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும். சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், சென்னை வரலாறு குறித்தும் கலாச்சார சிறப்பு குறித்தும் அழுத்தமாக பதிவு செய்த திரு.சு. முத்தையா அவர்கள் தான் முதன்முதலில் சென்னை தின கொண்டாட்டத்தை முன்னெடுக்கச் செய்தவர் என்பதை இத்தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன். சென்னை தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமல்லாமல் கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் திகழ்கிறது. சென்னையை வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சென்னை வாசிகளுக்கும் 382-வது சென்னை தின வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.