“விபத்தால் தளர்ந்து போகாமல்.. புதிய சாதனை படைத்த அவானி லெகரா” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

 

“விபத்தால் தளர்ந்து போகாமல்.. புதிய சாதனை படைத்த அவானி லெகரா” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற அவானி லெகராவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றிருக்கும் இந்திய வீராங்கனை அவனில் அகரா, இன்று நடைபெற்ற 50 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 445.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். அதற்கு முன்னதாக 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுக் கொடுத்தார். பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது மட்டுமல்லாமல் துப்பாக்கிச் சுடுதலில் 249.6 புள்ளிகளை பெற்று உலக சாதனையை வீழ்த்தியுள்ளார்.

“விபத்தால் தளர்ந்து போகாமல்.. புதிய சாதனை படைத்த அவானி லெகரா” – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை அவானி லெகராவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அவானி லெகரா பாராலிம்பிக் போட்டியில் பல பதக்கங்களை வென்று இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். தனக்கு நேர்ந்த விபத்தில் முதுகுதண்டு பாதிப்பு ஏற்பட்டும் துவண்டு போகாமல் நாம் அனைவரும் பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாக அவர் உயர்ந்துள்ளார். அவரது சாதனையை போற்றுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.