உலகத் தமிழர்களே… உயிர்காக்க நிதி வழங்குங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

 

உலகத் தமிழர்களே… உயிர்காக்க நிதி வழங்குங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

வெளிநாடு வாழ் தமிழர்கள் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதிலிருந்து நாம் மீண்டும் விடுவோம். இந்த நம்பிக்கையையே உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கிறேன். தமிழகம் மருத்துவ நெருக்கடியாலும் நிதி நெருக்கடியாலும் தவிக்கிறது. மக்களைக் காக்கும் பணியில் கண்ணும் கருத்துமாக தமிழக அரசு செயலாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களும் செவிலியர்களும் உயிரை பணையம் வைத்து பணியாற்றி வருகிறார்கள்.

உலகத் தமிழர்களே… உயிர்காக்க நிதி வழங்குங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

கொரனோ இரண்டாவது அலை மிக மோசமாக உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. இதனால், தமிழகத்தை காக்க தாராளமாக நிதி வழங்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுத்தேன். கருணை உள்ளதோடு பலரும் நிதி வழங்குகிறார்கள். அமெரிக்காவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து சரியான தருணத்தில் தமிழக மக்களுக்கு உதவுவதை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மிகவும் சிக்கலான நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு உதவ முன்வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களால் இயன்ற உதவியை தமிழ் மக்களை காக்க செய்ய வேண்டும். அந்த பணம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மட்டுமே பயன்படுத்தப்படும். அதன் விபரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும். மக்களின் உயிர் காக்க உதவி கரம் நீட்டுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.