சபாநாயகரின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சபாநாயகரின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபையின் சபாநாயகராக ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ அப்பாவு தேர்வு செய்யப்பட்டார். 1996ம் ஆண்டு முதல் ராதாபுரம் தொகுதியில் தொடர் வெற்றியைக் கண்ட அவர், அவர் 2016ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். 2021ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் மிகுந்த அனுபவம் கொண்ட இவர், போட்டியன்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

சபாநாயகரின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில், சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரை ஆளுங்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இதையடுத்து அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அவையே நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சபாநாயகராக அப்பாவு அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போது என் நெஞ்சம் பூரிப்படைந்துள்ளது. ஊடக விவாதங்களில் கருத்தோடும் சுவையோடும் பேசும் உங்களை நான் போற்றுகிறேன். தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பேரவை தலைவர்களாக இருந்துள்ளனர். அண்ணாவின் தம்பிகளாக எங்களுக்கு ஆணவம் இருக்காது; கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம் என்று உருக்கமாக பேசினார்.

இதைத்தொடர்ந்து அவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, கட்சி பாகுபாடின்றி பேச வாய்ப்பு தருவேன். சட்டத்தை மதித்து நாகரீகமாக நடந்து கொள்வேன். அரசியலில் காலியாக இருந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று கூறினார். மேலும், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.