திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் ஆய்வு!

 

திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் ஆய்வு!

தஞ்சை, திருவாரூரில் மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் ஆய்வு!

கொரோனா பரவல் தமிழகத்தில் வேகம் காட்டி வரும் நிலையில் அதை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாவட்டம் தோறும் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் ஆய்வு!

இந்நிலையில் திருவாரூரில் மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு குறித்து இன்று காலை 9.30க்கு முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். 781 பயனாளிகளுக்கு ரூ.5.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்க உள்ளார். அதேபோல் தஞ்சையில் பிற்பகல் 2.45 மணிக்கு மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்யும் முதல்வர் அங்கு ரூ.38.12 கோடி முடிந்த திட்டப்பணிகளைதொடங்கி வைத்து ரூ.71.27 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.