” பல துறைகளில் உழைப்பால் உச்சத்தை தொட்டவர்கள் நாடார் சமுதாய மக்கள்” – முதல்வர் பழனிசாமி

 

” பல துறைகளில் உழைப்பால் உச்சத்தை தொட்டவர்கள் நாடார் சமுதாய மக்கள்” – முதல்வர் பழனிசாமி

காமராஜரை போற்றி வணங்குவதாக முதல்வர் பழனிசாமி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

” பல துறைகளில் உழைப்பால் உச்சத்தை தொட்டவர்கள் நாடார் சமுதாய மக்கள்” – முதல்வர் பழனிசாமி

மறைந்த தமிழக முதல்வர்களும் முக்கியமானவர் காமராஜர். உண்மையிலேயே மக்களுக்காக வாழ்ந்த தலைவர் காமராஜர். அதனால் தான் அரை நூற்றாண்டு காலம் ஆன போதிலும், மக்களின் வாக்குகளைப் பெற ‘காமராஜர் ஆட்சியைக் கொடுப்போம்’ என்று சொல்லி சிலர் , ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு கேட்கிறார்கள்.

” பல துறைகளில் உழைப்பால் உச்சத்தை தொட்டவர்கள் நாடார் சமுதாய மக்கள்” – முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் சென்னையில் நாடார் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு பரிசு வழங்கினார். அப்போது பேசிய அவர், ” இருபெரும் தலைவர்களை தந்தவர் காமராஜர். அவரை நான் போற்றி வணங்குகிறேன். நாடார் சமுதாய மக்கள் உழைப்பு, கல்வி, சமூக பணியில் சிறந்து விளங்குபவர்கள். பல துறைகளில் உழைப்பால் உச்சத்தை தொட்டவர்கள். கல்வியாளர்களை உருவாக்குவதில் நாடார் சமுதாய மக்கள் அக்கறையோடு செயல்பட்டு வருகின்றனர்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டி கிடைக்க தமிழக அரசு பரிசீலனை செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.