சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும்: முதல்வர்

 

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும்: முதல்வர்

கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இரு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதால் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வாறு காவலர்கள் மீது புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதேபோல் நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதால் கட்டிட தொழிலாளியான கணேச மூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும்: முதல்வர்

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்ற அனுமதிபெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும். அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. வீட்டில் ஒரு அறையில் இருக்கும் ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன ஆலோசனை வழங்கினார்” என தெரிவித்தார்.