“தொண்டையில் புண்” – முதல்வர் பழனிசாமி அவதி!

 

“தொண்டையில் புண்” – முதல்வர் பழனிசாமி அவதி!

சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் பழனிசாமிக்கு தொண்டையில் புண் வந்துவிட்டதால் அவதிப்பட்டு வருகிறார்.

“தொண்டையில் புண்” – முதல்வர் பழனிசாமி அவதி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் பிரச்சாரப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். திமுகவைப் பொறுத்தவரையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பரப்புரையை திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கி நடத்தி வருகிறார். அதேபோல் சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பரப்புரையில் திமுக அரசியல் திட்டங்கள் மற்றும் அக்கட்சியை குறித்த தனது விமர்சனங்களை தொடர்ந்து பேசி வரும் முதல்வர், அதிமுக அரசின் நலத் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார்.

“தொண்டையில் புண்” – முதல்வர் பழனிசாமி அவதி!

இந்நிலையில் நேற்று மதுரையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி அங்கு நடைபெற்ற முத்தரையர்கள் சங்க மாநாட்டிலும் கலந்து கொண்டார். பின்னர் மாநாடு முடிந்து சென்னைக்கு வர முதல்வர் பழனிசாமி மதுரை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அங்கு அவருக்காக செய்தியாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர்களை பார்த்து பேசிய முதல்வர், தனக்கு பேசிப்பேசி தொண்டையில் புண் வந்துவிட்டது . தொண்டையில் அதிகமாக வலி இருக்கிறது. இதனால் பேசமுடியவில்லை; உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.