‘வீடு இல்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள்’ – முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

 

‘வீடு இல்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள்’ – முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என அதிரடியாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி இன்று காங்கேயம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நான் ஒரு விவசாயி. அதனால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருக்கிறேன். வறட்சியாலும் புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறேன்.

‘வீடு இல்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள்’ – முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

அரசாணை வெளியிட்டு அதனை நிறைவேற்றி இருக்கிறேன். 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். இதற்காக 12 ஆயிரத்துக்கு 110 கோடி தள்ளுபடி செய்திருக்கிறோம் என்று கூறினார். தொடர்ந்து, வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். நகர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் ஒரு நாடு சிறக்க கல்வியில் முன்னேற்றம் இருக்க வேண்டும். கல்வியில் சிறந்து இருக்கும் மாநிலத்தில் எல்லா வளமும் தானாக வந்து சேரும் என்று கூறிய அவர், பிற துறைகளை காட்டிலும் கல்வித்துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக ஆட்சியில் தான் அதிகளவில் கலைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.