காதலன் சரியாக பேசாததால் விரக்தி… துணிக்கடை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கெலை…

 

காதலன் சரியாக பேசாததால் விரக்தி… துணிக்கடை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கெலை…

சென்னை

காதலன் செல்போனை எடுத்து சரியாக பேசாத விரக்தியில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா(18). இவர் போரூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இவரது வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்துச்சென்று பார்த்தபோது பவித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அந்த பகுதி மக்கள் உதவியுடன் பவித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மதுரவாயல் காவல்நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில், அந்த இளைஞர் அய்யப்பன் தாங்கலை சேர்ந்த மோகன்(22) என்பதும், கடையில் பணிபுரிந்தபோது பவித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்தது.

காதலன் சரியாக பேசாததால் விரக்தி… துணிக்கடை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கெலை…

தற்போது மோகன் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பவித்ராவுடன் சரிவர பேசாததாக கூறப்படுகிறது. மேலும் நேற்று முன்தினம் பவித்ரா, தன்னை வெளியே அழைத்து செல்லும்படி கேட்டபோது வேலையில் இருப்பதால் வர முடியாது என்றும் மோகன் கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த பவித்ரா தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. எனினும், தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.