காதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி!

 

காதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஒரு இளைஞர் திடீரென நேற்று மாலை ஏறியுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.குப்பம் காவல்துறையினர் கோபுரத்தின் மீது ஏறிய நபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த ராஜபாண்டியன் (25)என்றும் கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தான் காதலித்து வருவதாகவும் தெரிவித்தார். எங்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அதனால் காதலியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி சுமார் 100 அடி உள்ள கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்தார்.

காதலியுடன் சேர்த்து வைக்ககோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி!

இதனிடையே உடனடியாக குடியாத்தம் தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் ராஜ பாண்டியனை கோபுரத்திலிருந்து கீழே இறக்கினர். இறக்கப்பட்ட ராஜபாண்டி மயக்க முற்றதால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கே.வி.குப்பம் காவல்துறைனர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த பெண்ணை அழைத்து விசாரித்ததில் தான் காதலிக்க வில்லை என பெண் கூறியதால் காவல் துறை தொடர் விசாரணை மேற்க்கொண்டு வருகிறது.