கோவையில் கடன் தொல்லையால் துப்புரவு தொழிலாளி தற்கொலை!

 

கோவையில் கடன் தொல்லையால் துப்புரவு தொழிலாளி தற்கொலை!

கோவை

கோவை ஒண்டிப்புதூர் அருகே கடன் தொல்லையால் துப்புரவு தொழிலாளி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பிரகாஷ்ராஜ் (19). இவர் பள்ளபாளையம் நகர பஞ்சாயத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், பிரகாஷ் ராஜ் தனது சகோதரி திருமணம் மற்றும் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக கடன் வாங்கி உள்ளார். ஆனால், கடனை சரிவர திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

கோவையில் கடன் தொல்லையால் துப்புரவு தொழிலாளி தற்கொலை!

இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இதனால் வாழ்வில் விரக்தியடைந்து காணப்பட்ட பிரகாஷ் ராஜ், நேற்று வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பிரகாஷ்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து பிரகாஷ் ராஜின் தாயார் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.