“பிஜேபி காரனுக்கு இங்க என்ன வேல” – மதுரையில் பாஜகவினர் விரட்டியடிப்பு!

 

“பிஜேபி காரனுக்கு இங்க என்ன வேல” – மதுரையில் பாஜகவினர் விரட்டியடிப்பு!

நாடு முழுவதும் இன்று சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்களும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவருகின்றனர். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

“பிஜேபி காரனுக்கு இங்க என்ன வேல” – மதுரையில் பாஜகவினர் விரட்டியடிப்பு!

இச்சூழலில் மதுரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவிப்பதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு ஏராளமான விசிக தொண்டர்கள் கூடியிருந்தனர். அந்தச் சமயம் பார்த்து முன்னாள் பாஜக புறநகர் மாவட்டச் செயலாளர் மகா சுசீந்திரன் தலைமையில் பாஜகவினர் அங்கு வருகை தந்தனர். அப்போது அவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க முற்படுகையில் விசிக தொண்டர்கள் தடுத்தனர்.

அப்போது ஒரு தொண்டர், “எங்க அம்பேத்கர் அய்யாவுக்கு நீ எதுக்கு மால போடுற. பிஜேபி காரனுக்கு இங்க என்ன வேலை. போ போ போய்ட்டே இரு” என்று சொல்லி விரட்டியடிக்கும் தொனியில் பேசினார். இதனால் இரண்டு கட்சியினருக்கும் இடையே மோதல் உருவானது. அதிருஷ்டவசமாக கைகலப்பு எதுவும் நடைபெறவில்லை. வார்த்தை மோதல் மட்டுமே நடந்தது. அதற்குப் பின் பாஜகவினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.