பெண் பேராசிரியர்களின் ஆபாச போட்டோக்கள் -கல்லூரி மாணவர் செய்த பலான வேலைகள்

 

பெண் பேராசிரியர்களின் ஆபாச போட்டோக்கள் -கல்லூரி மாணவர் செய்த பலான வேலைகள்

.
பெண் பேராசிரியர்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டிய ஒரு மாணவரை போலீசார் கைது செய்தனர் .

பெண் பேராசிரியர்களின் ஆபாச போட்டோக்கள் -கல்லூரி மாணவர் செய்த பலான வேலைகள்


ஹைதராபாத்தில் உள்ள ராச்சகொண்டாவின் கட்கர்சரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் பல பெண் பேராசிரியர்களின் போட்டோக்களை அந்த கல்லூரியின் வெப் தளத்திலிருந்து ஒரு மாணவர் எடுத்தார் .பின்னர் அந்த போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணைய தளத்தில் உலவவிட்டார் .அதன் பிறகு அந்த போட்டோக்களையும் மற்றும் சில ஆபாச மெஸேஜையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அனுப்பினார் .பின்னர் அந்த போட்டோக்களை மேலும் வைரலாகாமல் இருக்க பணம் கேட்டு அந்த பேராசியர்களை மிரட்டியுள்ளார் .
அந்த மாணவர் மனவியல் துறையில் முதுகலை படிக்கும் மாணவர் ஆவார் .அந்த மாணவர் மீது பாதிக்கப்பட்ட ஒரு பெண் பேராசிரியர் அங்குள்ள காவல் நிலையத்தில் ஜூன் 6ம் தேதி புகாரளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து இந்த வழக்கை சைபர் க்ரைம் போலீசாருக்கு மாற்றினார்கள் .பிறகு சைபர் க்ரைம் போலீசார் அந்த வாலிபரை பற்றி விசாரணை மேற்கொண்டனர் .அவரின் இணைய தள அக்கௌன்ட்டை ஆராய்ந்து பார்த்து அந்த மாணவரை கைது செய்தனர் .அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இதேபோல் பல ஆசிரியர்களின் போட்டோக்களை மற்றும் விவரங்களை கல்லூரி வெப்சைட்டிலிருந்து எடுத்து மார்பிங் செய்து பணம் பறித்துள்ளதை கண்டுபிடித்தனர் .