சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்த முடிவு !
Aug 12, 2020, 08:15 IST1597200339000
தி.மு.க எம்.பி கனிமொழியிடம் விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என்று கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.இதையடுத்துஎம்பி கனிமொழிக்கு ஆதரவாக பலரும் கருத்து கூறி வந்தனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பணியாளர்களை அதிகம் பணியமர்த்த சிஐஎஸ்எப் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.