புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்- பிரதமர் மோடியை தாக்கிய சித்தார்த்
புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடியை தாக்கி நடிகர் சித்தார்த் பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை: புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடியை தாக்கி நடிகர் சித்தார்த் பதிவு வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா பயங்கரவாதிகளை அழித்தது குறித்து ஒவ்வொரு மேடையிலும் பிரதமர் மோடி தவறாமல் பேசிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டேன். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய் நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது.
உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அரசியல் ரீதியாக என்ன நடந்தாலும், உடனுக்குடன் தன் கருத்துகளைத் தெரிவிப்பவர் நடிகர் சித்தார்த். அந்த வகையில் பிரதமர் மோடியின் பேச்சு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் ‘மக்கள் நமது பாதுகாப்புப்படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். ஆனால் உங்களையும், உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை.
Our people believe and stand by the armed forces. It’s you and your gang they don’t believe. Stop politicizing #Pulwama. Stop pretending to be heroes on the backs of real heroes. You should respect the forces. You are not a soldier. Don’t expect to be treated like one. Jai Hind. https://t.co/SEwI1Zw5Bh
— Siddharth (@Actor_Siddharth) March 4, 2019
புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள்.பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த்’. என்று அதில் பதிவிட்டுள்ளார்.