‘உலகளவில் 400 கோடி வசூல்’ – சர்வதேச சாதனை படைத்துள்ள ‘2.O’ கலக்‌ஷன் ரிப்போர்ட்!

 

‘உலகளவில் 400 கோடி வசூல்’ – சர்வதேச சாதனை படைத்துள்ள ‘2.O’ கலக்‌ஷன் ரிப்போர்ட்!

உலக அளவில் படம் வெளியாகி 4 நாட்களில் அதிக வசூல் செய்த பெருமையை 2.O திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

சென்னை: உலக அளவில் படம் வெளியாகி 4 நாட்களில் அதிக வசூல் செய்த பெருமையை 2.O திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் 10,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடி வருகிறது. படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அக்‌ஷய் குமாரை படம் பார்க்கும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

படம் வெளியாகி 4 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் இந்தப் படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்புர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இது பிளாக் பஸ்டர் அல்ல, மெகா பிளாக் பஸ்டர் என்று பெருமிதமாக ட்வீட் செய்துள்ளது. 

இதன்மூலம், தமிழில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையும், நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 2 வரை இந்த 4 நாட்களில் உலக அளவில் அதிக வசூல் செய்த பெருமையும் 2.0 படத்துக்கு கிடைத்துள்ளது. மேலும் 2018- ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான தென்னிந்திய படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற பெருமையையும் 2.0 பெற்றுள்ளது.