“டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களை பந்துகளால் தாக்கியதே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம்”

 

“டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களை பந்துகளால் தாக்கியதே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம்”

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் வியூகத்தை பயிற்சியாளர் சில்வர்வுட் ஏன் தடுத்து நிறுத்தவில்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கல் வாகன் சாடியுள்ளார்.

“டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களை பந்துகளால் தாக்கியதே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம்”

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி, போட்டியை வெல்லும் இடத்தில் இருந்தது.
209 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது இந்திய அணியின் முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனுக்கு இந்திய வீரர் பும்ரா அதிவேகத்தில் பவுன்சர்கள் மற்றும் யார்க்கர்கள் வீசி திணறடித்தார். இதற்கு பதிலடி தரும் விதத்தில் பும்ரா பேட்டிங் செய்யும் போது ஆண்டர்சன், ராபின்சன், ரூட் ஆகியோர் பவுன்சர்கள் மற்றும் தலையை தாக்கும் விதத்தில் பந்துக்களை வீசினர்.

இந்த இடத்தில் தான் இங்கிலாந்து அணி கோட்டை விட்டதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் வாகன் தெரிவித்துள்ளார். பும்ரா மற்றும் சமியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் நோக்கத்தை கைவிட்டு, அவர்களை தாக்கும் நோக்கில் இங்கிலாந்து கேப்டன் ரூட் செயல்பட்டதே ஆட்டத்தை கோட்டை விட்டதற்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இப்படி நிதானம் இழந்து பந்து வீசும்போது, எதிரில் இருந்த பும்ராவும், சமியும், பந்துக்களை அடிப்பதில் கவனம் செலுத்தி ரன்களை சேகரித்தனர்.

“டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களை பந்துகளால் தாக்கியதே இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம்”

இங்கிலாந்து கேப்டன் ரூட் இவ்வாறு செயல்படும் போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் ஏன் கேப்டனை கண்டிக்கவில்லை எனவும் வாகன் கேள்வி எழுப்பியுள்ளார். உணவு இடைவெளிக்கு முந்தைய இந்த 20 நிமிட மோசமான ஆட்டமே இங்கிலாந்து அணி போட்டியில் தோல்வி அடைய காரணம் என தெரிவித்த வாகன், இடைவெளியின்போது பயிற்சியாளர் ரூட்டிடம் இந்த விவரத்தை தெரிவித்து இருக்கலாம் என்றும் கூறினார். 209 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த இந்திய அணியை, இங்கிலாந்து அணியின் இந்த மோசமான வியூகத்தால் 298 ரன்களுடன் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.