‘சித்ரா நீடிக்கும் மர்மம்’ ஹேம்நாத்திடம் விசாரணை தொடரும்: காவல்துறை திட்டவட்டம்!

 

‘சித்ரா நீடிக்கும் மர்மம்’ ஹேம்நாத்திடம் விசாரணை தொடரும்: காவல்துறை திட்டவட்டம்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் மர்மம் விலகும் வரை கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை தொடரும் என காவல்துறை அறிவித்துள்ளது.

‘சித்ரா நீடிக்கும் மர்மம்’ ஹேம்நாத்திடம் விசாரணை தொடரும்: காவல்துறை திட்டவட்டம்!

பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி, சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் முன்னேறி, சின்னத்திரையில் கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தவர் நடிகை சித்ரா. இவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடர் தான். அதில், முல்லை என்ற சித்ராவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. கடந்த புதன்கிழமை இவர் நசரத்பேட்டையில் இருக்கும் சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

‘சித்ரா நீடிக்கும் மர்மம்’ ஹேம்நாத்திடம் விசாரணை தொடரும்: காவல்துறை திட்டவட்டம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த ஹேம்நாத்துடன் இவர் அண்மையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். ஹேம்நாத் கொடுத்த அழுத்தத்தாலும், ஹேம்நாத்தை பிரிந்து வருமாறு தாய் கொடுத்த அழுத்தத்தாலும் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும், சித்ரா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். சித்ரா தற்கொலை செய்து கொண்ட நாள் முதல், இன்று வரை ஹேம்நாத்திடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘சித்ரா நீடிக்கும் மர்மம்’ ஹேம்நாத்திடம் விசாரணை தொடரும்: காவல்துறை திட்டவட்டம்!

இந்த நிலையில், சித்ரா மரணத்தில் இருக்கும் மர்மம் விலகும் வரையில் ஹேம்நாத்திடம் விசாரணை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என சென்னை மாநகர காவல் துணை ஆணையர் தீபா சத்யன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவருடன் ஹேம்நாத் இருந்த போது, அன்று என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.