“சித்ரா கடைசியாக என்னிடம் பேசவில்லை” : மாமனார் ரவிச்சந்திரன் பேட்டி!

 

“சித்ரா கடைசியாக என்னிடம் பேசவில்லை” : மாமனார் ரவிச்சந்திரன் பேட்டி!

தற்கொலை செய்து கொள்வதற்கு சித்ரா என்னிடம் பேசவில்லை என சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், “சித்ரா இறந்தநாளில் கடைசியாக என்னிடம் பேசியதாக வெளியான தகவல் தவறு. உரிய, வெளிப்படையான விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். சரியான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து என் மகன் ஹேம்நாத்தை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“சித்ரா கடைசியாக என்னிடம் பேசவில்லை” : மாமனார் ரவிச்சந்திரன் பேட்டி!

நடிகை சித்ரா சொகுசு விடுதியில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, நாளுக்கு நாள் வெவ்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. போலீசாரால் கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத், சித்ராவின் செல்போனை எடுத்து சோதனை செய்யச் சொன்னதாகவும் அதில் சித்ரா தான் சிக்குவார் என்றும் கூறியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. அதாவது, சித்ரா செய்த தவறை தான் கேட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது போல அவர் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

“சித்ரா கடைசியாக என்னிடம் பேசவில்லை” : மாமனார் ரவிச்சந்திரன் பேட்டி!

ஹேம்நாத்தின் தந்தையும், வேறு யாரையோ காப்பாற்ற தனது மகனை கைது செய்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதனிடையே, சித்ரா தற்கொலை வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையின் முடிவில் தான், சித்ரா தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.