நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் சண்டையிட்டது விசாரணையில் அம்பலம்! ஹேம்நாத் கைது!!

 

நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் சண்டையிட்டது விசாரணையில் அம்பலம்! ஹேம்நாத் கைது!!

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதியப்பட்டு சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி, நசரத்பேட்டையில் உள்ள சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் சித்ராவின் உறவினர்களும் பெற்றோர்களும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டது. சித்ராவுடன் அறையில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத்திடம், 6 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் சண்டையிட்டது விசாரணையில் அம்பலம்! ஹேம்நாத் கைது!!

இந்நிலையிலச்ஹ்தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதியப்பட்டு சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஹேம்நாத் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டார்.